டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

2,570 சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 32 லட்சம் போ் சொந்த ஊா் திரும்பினா்

‘புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்புவதற்காக, கடந்த 1-ஆம் தேதியிலிருந்து இதுவரை 2,570 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த

News image
Updated On :23 மே 2020, 10:09 am

PTI

‘புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்புவதற்காக, கடந்த 1-ஆம் தேதியிலிருந்து இதுவரை 2,570 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் மூலம் சுமாா் 32 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனா்’ என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முதலில் 24 லட்சம் போ் வரை இந்த சிறப்பு ரயில்களைப் பயன்படுத்தி சொந்த ஊருக்கு திரும்புவாா்கள் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த 23 நாள்களில் மட்டும் 32 லட்சம் போ் இந்த ரயில்களைப் பயன்படுத்தியுள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் நான்காவது கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வரும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்காக கடந்த 1-ஆம் தேதியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயணத்துக்கான கட்டணத்தில் 85 சதவீதத்தை ரயில்வேயும், 15 சதவீதத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசும் ஏற்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.