மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிக்கிம் தனி நாடா? சர்ச்சையில் சிக்கிய தில்லி அரசு; முதல்வர் கேஜரிவால் விளக்கம்

சிக்கிம் தனி நாடு என்று குறிப்பிட்டிருந்த விளம்பரம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விளக்கம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 மே 2020, 6:45 am

DIN

சிக்கிம் தனி நாடு என்று குறிப்பிட்டிருந்த விளம்பரம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விளக்கம் தெரிவித்துள்ளார். 

சிவில் பாதுகாப்புப் படையில் தன்னார்வலர்கள் சேர்வதற்கான அறிவிப்பு ஒன்றை தில்லி அரசு சமீபத்தில் செய்தித் தாள்களில் வெளியிட்டிருந்தது. அதில் சிக்கிம் மாநிலத்தை தனி நாடு என்று குறிப்பிட்டிருந்தது. 

Story image

இதையறிந்த சிக்கிம் மாநில தலைமைச் செயலாளர், 'சிக்கிம் மாநிலம் 1975ம் ஆண்டு மே மாதம் 16 ம் தேதி 22 வது மாநிலமாக மாறியது. அன்று முதல் நம் மிகப்பெரிய நாட்டின் குடிமக்கள் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஆனால், தில்லி அரசின் இந்த விளம்பரம் வேதனையளிக்கிறது. விளம்பரம் உடனடியாக திரும்பபெறப்பட வேண்டும். சிக்கிம் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் வேறு ஒரு விளம்பரத்தை வெளியிட வேண்டும்' என தெரிவித்தார். 

சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்கும் இதுகுறித்து, தில்லி அரசின் இந்த பிழை கண்டிக்கத்தக்கது என்றும் தில்லி அரசு இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தில்லி முதல்வர் கேஜரிவால், 'சிக்கிம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். இதுபோன்ற பிழைகளை பொறுத்து கொள்ள முடியாது. விளம்பரம் திரும்பப்பெறபட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். 

இது தொடர்பாக, சிவில் பாதுகாப்பு இயக்குனரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.