சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜார்க்கண்டில் கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். 

News image
Updated On :26 மே 2020, 7:37 am

PTI

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். 

கொல்கத்தா சென்றுகொண்டிருந்த வாகனம் அதிகாலை 5 மணியளவில் தேசிய நெடுஞ்சாலை 2-யில் உள்ள பாலத்தின் மீது வேகமாக மோதி, அருகில் உள்ள குடியா ஆற்றில் கவிழ்ந்து விழுந்துள்ளது. 

இந்த விபத்தில் இரண்டு வயது சிறுமி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று கோவிந்த்பூர் காவல் நிலையில் பொறுப்பாளர் சுரேந்திர குமார் சிங் தெரிவித்தார். 

உயிரிழந்த நபர்கள் வைத்திருந்த ஆதார் அட்டைகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் மூலம் அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். முதல்கட்ட விசாரணையில் அவர்கள் பிகாரின் கயா மாவட்டத்திலிருந்து கொல்கத்தாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சடலங்களை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.