டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சொந்த ஊர்களுக்கு நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

News image
Updated On :26 மே 2020, 12:45 pm

DIN

புது தில்லி: நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்ற விவகாரத்தில், வரும் 28-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் உச்ச நீதிமன்றம், நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகளை செய்து கொடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்ற நிலை குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.