27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

விலங்குகளையும் விட்டுவைக்காத கரோனா அச்சம்: தனிமைப்படுத்தப்பட்ட குதிரை

ஜம்மு காஷ்மீரில் கரோனா அதிகம் பரவும் அபாயம் உள்ள ஷோபியான் பகுதியில் இருந்து உரிமையாளரை சுமந்து வந்த குதிரையையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தியுள்ளது.

News image
Updated On :28 மே 2020, 11:12 am IST


ஜம்மு காஷ்மீரில் கரோனா அதிகம் பரவும் அபாயம் உள்ள ஷோபியான் பகுதியில் இருந்து உரிமையாளரை சுமந்து வந்த குதிரையையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தியுள்ளது.

கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் ஷோபியானில் இருந்து ரஜௌரி மாவட்டத்துக்கு முகல் சாலை வழியாக திங்கள்கிழமை குதிரையும் அதன் உரிமையாளரும் வந்து சேர்ந்தனர்.

இந்த நிலையில், குதிரையின் உரிமையாளர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டு அவருக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், அவரை சுமந்து வந்த குதிரையையும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி அதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்பதை உறுதி செய்தனர்.

ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மற்ற குதிரைகளுடன் விடாமல், அதனை 14 நாள்கள் தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உரிமையாளருக்கு இன்னும் கரோனா பரிசோதனை முடிவுகள் வரவில்லை. ஒரு வேளை கரோனா இருந்தால், அதற்கேற்ப குதிரைக்கும் பராமரிப்பு நடவடிக்கை மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு நியூ யார்க்கில் உள்ள வனவிலங்குகள் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் புலிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தற்போது இந்தியாவில் குதிரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.