சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிகார் மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனர்: ராகுல்

பிகார் பேரவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிகார் மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.

News image
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
Updated On :3 நவம்பர் 2020, 11:44 am

DIN


பிகார் பேரவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிகார் மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.

பிகார் பேரவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடிஹாரில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

"லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பசியுடனும், தாகத்துடனும், நடந்தே வீடு திரும்பினர். ஆனால், பிரதமர் மோடி அரசு அவர்களுக்கு எவ்வித உதவியும் செய்யாமல் தவிக்கவிட்டது. அவர்கள்தான் தற்போது மக்களிடம் வாக்கு சேகரிக்க வருகின்றனர். 

பிரதமர் மோடியும், முதல்வர் நிதிஷ் குமாரும் பிகாரைக் கொள்ளையடித்துவிட்டனர். மக்கள் இதை உணர்ந்து மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனர். மகா கூட்டணி அரசு அமையும். குறிப்பிட்ட சாதிக்கான, மதத்துக்கான, வகுப்புக்கான அரசாக அது இருக்காது. ஒட்டுமொத்த பிகாருக்கான அரசாக இருக்கும். ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் அரசு.

வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் வாக்குறுதி அளித்தார். ஆனால், மக்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. இன்றைக்கும், வாழ்வாதாரத்துக்காக விவசாயிகள் வேறு ஒரு மாநிலத்துக்கு இடம்பெற வேண்டியுள்ளது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.