ஜம்மு-காஷ்மீர்: கார் விபத்தில் இருவர் பலி
ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.


ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். ஜம்மு மாகாணத்திற்குட்பட்ட பகுதியில் ஏர்பட்ட இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுயாகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் உத்தம்பூர் பகுதியில் இருந்து ராம்பன் பகுதிநோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது சுரங்கப் பாதையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் 9.2 கி.மீ தூரமுள்ள நாஷ்ரி சுரங்கம் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு இடையேயான தூரத்தை கிட்டத்தட்ட 30 கி.மீ குறைத்து, பயண நேரத்தை 2 மணிநேரம் குறைத்துள்ளது.
எனினும் குளிர்கால மாதங்களில் பனிப்பொழிவு அதிகரிப்பாலும், சாலை வழுக்குவதாலும் அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்வது குறிபிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...