மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி: காவலர் மீது காரை ஏற்றியவர் கைது

தில்லியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
தில்லி: காவலர் மீது காரை ஏற்றிய நபர் கைது (கோப்புப்படம்)
Updated On :5 நவம்பர் 2020, 8:18 am

DIN

தில்லியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தில்லி நகரைச் சேர்ந்த காவலர்களான ஜிதேந்தர் மற்றும் அன்கூர் ஆகியோர் குற்றச்சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இதனிடையே நள்ளிரவு வேளையில் சரிதா விஹார் பகுதியில் ஏ.டி.எம். வாயிலில் சொகுசுக் காரை நிறுத்தி இளைஞர்கள் சிலர் கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு சென்று அவர்களை கலைக்க முயன்றபோது, இளைஞர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காரில் மதுபாட்டில்கள் இருப்பதையும் காவலர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து காரை நெருங்கியபோது போக்குவரத்து காலவர்களை இடித்துவிட்டு கார் புறப்பட்டது. இதில் காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

மற்றொரு காவலர் காரை பின்தொடர்ந்து சென்ற நிலையில், அவரது காலில் காரை ஏற்றிவிட்டு ஓட்டுநர் தப்பிச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காரை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஓட்டுநரை அதிரடியாக கைது செய்தனர். சொகுசுக் கார் ஓட்டுநரின் உறவினருடையது என்றும், நண்பர்களுடனான பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக காரை வாங்கிவந்ததாகவும் துணை ஆணையர் மீனா தெரிவித்துள்ளார்.

ஓட்டுநர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.