இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஹரியாணாவில் தனியார் துறையில் உள்ளூர்வாசிகளுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றம்

தனியார் துறை வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஹரியாணாவில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

News image
ஹரியாணா தொழிலாளர் துறை அமைச்சர் துஷ்யந்த் செளதாலா
Updated On :5 நவம்பர் 2020, 2:53 pm

DIN

தனியார் துறை வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஹரியாணாவில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

ஹரியாணா மாநிலத்தில் உள்ளூர் மக்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆளும் அரசின் தொழிலாளர் துறை அமைச்சர் துஷ்யந்த் செளதாலா தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம் தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளில் ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாக ஊதியம் பெறும் வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவிகித பணிகள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என ஹரியாணா அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஜேஜேபி கட்சியின் துஷ்யந்த் செளதாலா தேர்தல் வாக்குறுதியாக தனியார் துறை இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.