மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'தில்லியில் நவம்பர் 30 வரை பட்டாசுகளுக்குத் தடை'

தில்லியில் அனைத்துவிதமான பட்டாசுகளுக்கும் நாளை முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

News image
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் (கோப்புப்படம்)
Updated On :6 நவம்பர் 2020, 6:41 am

DIN

தில்லியில் அனைத்துவிதமான பட்டாசுகளுக்கும் நாளை முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு பட்டாசுகள் வெடிப்பதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று நேற்று (வியாழக்கிழமை) முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டதைக் குறிப்பிட்டார்.

அந்தவகையில் தில்லியில் அனைத்து விதமான பட்டாசுகளுக்கும் நவம்பர் 7 முதல் 30 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாகக் கூறினார்.

தில்லியில் கரோனா தொற்று மூன்றாவது அலை வீசுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் சத்யேந்திர ஜெயின், மூன்றாம் கட்ட கரோனா பரவலால் பலர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, ''மூன்றாம் கட்ட கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 7,231 பேருக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் தில்லியில் 8,572 கரோனா படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக கரோனா படுக்கைகளை அதிகரித்து வருகிறோம். தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா படுக்கைகளை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளோம்'' என்று சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.