பிகார் 3-ம் கட்ட தேர்தல்: 3 மணி நிலவரப்படி 46 சதவிகிதம் வாக்குப்பதிவு
பிகார் பேரவைத் தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 45.91 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.


பிகார் பேரவைத் தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 45.91 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிகார் பேரவைத் தேர்தலுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு மற்றும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 3-ம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு 78 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 2.35 வாக்காளர்களில் 45.91 சதவிகிதத்தினர் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சுபால் மாவட்டத்தில் 51.12 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சம் தர்பாங்காவில் 41.15 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
இரண்டாம் கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 44.51 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. முதற்கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.29 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...