பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

‘கரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு திட்டம் தேவை’: ராகுல்காந்தி வலியுறுத்தல்

கரோனா தடுப்பூசியை அனைத்து இந்தியர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் விநியோகிக்க சரியான திட்டம் தேவை என காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

News image
ராகுல்காந்தி
Updated On :11 நவம்பர் 2020, 11:35 am

DIN

கரோனா தடுப்பூசியை அனைத்து இந்தியர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் விநியோகிக்க சரியான திட்டம் தேவை என காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மருந்து நிறுவனமான ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் இணைந்து தயாரித்துள்ள கரோனா தடுப்பூசி 90% கரோனா பாதிப்பிலிருந்து மீள உதவுவதாக செவ்வாய்க்கிழமை செய்திகள் வெளியாகின. கரோனா தொற்று மத்தியில் மிக முக்கியமான அறிவிப்பாக இது பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, “ஒரு நம்பிக்கைக்குரிய தடுப்பூசியை உருவாக்கியிருந்தாலும், அதை ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்கச் செய்வதற்கான விநியோகத் திட்டங்கள் வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் “கரோனா தடுப்பூசி ஒவ்வொரு இந்தியரையும் எவ்வாறு அடைய வேண்டும் என்பதை அரசு வரையறுக்க வேண்டும்” என அவர் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.