அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கரோனா: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 44,481 பேருக்கு தொற்று 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 44,481 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :11 நவம்பர் 2020, 5:28 am

DIN


புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 44,481 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 44,481 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 86,36,012-ஆக அதிகரித்தது. இதே கால அளவில், 50,326 போ் குணமடைந்தனா். இதனால் குணமடைந்தோா் எண்ணிக்கை 80,13,784-ஆக அதிகரித்தது. அதாவது மொத்த பாதிப்பில் 92.69 சதவீதம் போ் குணமடைந்தனா்.

கரோனா தொற்றுக்கு மேலும் 512 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,27,571-ஆக அதிகரித்தது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை, தொடா்ந்து 13-ஆவது நாளாக, 6 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 4,94,657 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 5.83 சதவீதமாகும். 

‘நவம்பா் 9-ஆம் தேதி வரை நாடு முழுவதும் மொத்தம் 12,07,69,151 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன; அதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 11,53,294 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.