சிபிஎஸ்இ பள்ளி மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ அளிக்கும் இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தில் சேர்ந்து பயன்பெற தகுதியுள்ள மாணவிகள், www.cbse.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிசம்பர் 10 கடைசி நாளாகும்.
2020-ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பெற்றோருக்கு ஒரே ஒரு மகளாக இருக்கும் மாணவிகள், இரண்டு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, பிளஸ் 2 படிப்புக்கான கல்வி உதவித் தொகை மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கான பரிசுக்கும் விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித் தொகைக்கு, ஒற்றைப் பெண் குழந்தையாக இருந்து, பத்தாம் வகுப்பில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தகுதிபெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


