மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாத் பூஜை: நீர்நிலைகளில் மக்கள் ஒன்றுகூடி வழிபாடு நடத்தத் தடை

தில்லியில் சாத் பூஜைக்கு மக்கள் நீர்நிலைகளில் கூடி வழிபாடு நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

News image
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் (கோப்புப்படம்)
Updated On :12 நவம்பர் 2020, 10:03 am

DIN

தில்லியில் சாத் பூஜைக்கு மக்கள் நீர்நிலைகளில் கூடி வழிபாடு நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வடமாநிலங்களில் சாத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கும் வகையில், இந்த ஆண்டு சாத் பூஜைக்கு நீர்நிலைகளில் வழிபாடு நடத்தத் தடை விதிக்கப்படுகிறது என்று கூறினார்.

தில்லியில் நேற்று (புதன்கிழமை) ஒருநாளில் மட்டும் 8,539 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 85 பேர் உயிரிழந்த நிலையில் 7,264 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தில்லியில் கரோனா இறப்பு விகிதம் 1.57 சதவிகிதமாக உள்ளது.

இதனால், மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் சாத் பூஜைக்கு நீர்நிலைகளில் மக்கள் ஒன்றுகூடி வழிபாடு நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

மேலும், கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதால், தொற்று 'பாசிடிவ்' நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகக் குறிப்பிட்டார்.

எனினும் கடந்த 10 நாள்களாக கரோனா இறப்பு விகிதம் 1 சதவிகிதத்திற்கும் குறைவாக இருப்பதாகத் தெரிவித்தார். தொற்று பரவல் அடுத்தடுத்த வாரங்களில் குறையும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.