தீபாவளிக்கு மற்ற மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து லக்னெளவுக்கு வரும் மக்கள் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, லக்னெள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீபாவளியைக் கொண்டாடுவதற்காக மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் வரும் நிலையில் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
இதற்காக 13 சிறப்பு மருத்துவக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகளின் தொடர்பு எண் உள்ளிட்டவிவரங்களும் குறிப்பிடப்படும் என்று லக்னெள தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) டாக்டர் சஞ்சய் பட்னாகர் தெரிவித்தார்.
பண்டிகை காலங்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னெளவில் இதுவரை 66,237 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 917 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100% வாக்குப்பதிவை உறுதிசெய்ய விழிப்புணா்வுப் பேரணி

தோ்தல் விழிப்புணா்வு: பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவா்கள்

தோ்தல் விதிமீறல்: திமுக முன்னாள் எம்.பி. மீது வழக்கு

தொகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க விரைவில் சிப்காட்: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி வாக்குறுதி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


