சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

லக்னெள வருவோருக்கு கரோனா பரிசோதனை: மாவட்ட நிர்வாகம் தகவல்

தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து லக்னெளவுக்கு வரும் மக்கள் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :13 நவம்பர் 2020, 10:55 am

தீபாவளிக்கு மற்ற மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து லக்னெளவுக்கு வரும் மக்கள் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, லக்னெள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீபாவளியைக் கொண்டாடுவதற்காக மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் வரும் நிலையில் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

இதற்காக 13 சிறப்பு மருத்துவக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்  பயணிகளின் தொடர்பு எண் உள்ளிட்டவிவரங்களும் குறிப்பிடப்படும் என்று லக்னெள தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) டாக்டர் சஞ்சய் பட்னாகர் தெரிவித்தார். 

பண்டிகை காலங்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லக்னெளவில் இதுவரை 66,237 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 917 பேர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.