பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிகாரில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

News image
பிகாரில் நாளை அமைச்சரவைக் கூட்டம் (கோப்புப்படம்)
Updated On :14 நவம்பர் 2020, 11:26 am

DIN

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வராக நிதீஷ் குமார் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற முடிவுகள் குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க. 74 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும் கைப்பற்றியது.

குறைந்த இடங்களை கைப்பற்றியிருந்தாலும், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நிதீஷ் குமாரே முதல்வராக நீடிப்பார் என்று பாஜக அறிவித்திருந்தது. 

நவம்பர் 29-ஆம் தேதியுடன் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ளதால், நேற்று தமது முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜிநாமா செய்தார். இதனை ஆளுநர் பகு செளஹானும் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் நடைபெறவுள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.