நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒடிசா பேரவைக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து

​ஒடிசா பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் சுர்ஜ்யா நாராயண் பத்ரோ புதன்கிழமை அறிவித்தார்.

News image
Updated On :18 நவம்பர் 2020, 10:36 am

DIN


ஒடிசா பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் சுர்ஜ்யா நாராயண் பத்ரோ புதன்கிழமை அறிவித்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்திய அவர், கரோனா சூழல் காரணமாக இந்த முடிவை எடுப்பதாகத் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:

"கரோனா நெறிமுறைகளுக்கு ஏற்ப பேரவைக் கூட்டம் நாள்தோறும் 4 1/2 மணி நேரம் நடைபெறும். இருக்கை வசதிகளும் வழிகாட்டுதலுக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கும். மூத்த எம்எல்ஏ-க்கள் காணொலி வாயிலாக பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கலாம். சட்டப்பேரவை உறுப்பினர்கள், பேரவை ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட அனைவரும் கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டவுடனே பேரவையில் அனுமதிக்கப்படுவர். பேரவை வளாகங்களில் பரிசோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

நவம்பர் 20-ம் தேதி கூட்டத்தொடரின் முதல் நாளில் 2020-21 நிதியாண்டுக்கான துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என்றார்.

எனினும், கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.