டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

பாகிஸ்தானில் 1,300 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் கண்டுபிடிப்பு

வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வத் மாவட்டத்தில், சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொல்லியத்துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

News image

புகைப்படக் கோப்பிலிருந்து

Updated On :20 நவம்பர் 2020, 6:02 pm IST


பெஷாவர்: வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாத் மாவட்டத்தில், சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொல்லியத்துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பரிகோட் குண்டாய் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியின்போது இந்த புராதான கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அகழாய்வுத் துறையின் கைபர் பக்த்ன்க்வா அதிகாரிகள் இது பற்றி கூறுகையில், அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கடவுள் விஷ்ணுவின் கோயிலாகும்.  இது இந்து சாஹி காலத்தில் அதாவது சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்து சாஹிக்கள் அல்லது காபூல் சாஸிக்களின் ஆட்சி காபூல் பள்ளதாக்கு (கிழக்கு ஆப்கானிஸ்தான்), கந்தாரா (தற்போதைய பாகிஸ்தான்) மற்றும் தற்போதைய வடமேற்கு இந்தியப் பகுதிகளில் நடைபெற்று வந்தது.

இந்த அகழாய்வின் போது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கோயிலுக்கு அருகே படைநிலைகளும், நேரத்தைக் காட்டும் கோபுரங்களையும் தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கோயிலுக்கு அருகே ஒரு நீர்த்தொட்டியை கண்டுபிடித்திருக்கும் தொல்லியல் நிபுணர்கள், இதனை, கோயிலுக்குச் செல்லும் முன் இந்துக்கள் குளிக்கப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த ஸ்வாத் மாவட்டம் இருந்தாலும், இந்து சாஹி காலத்தில் கட்டப்பட்ட பல கட்டட அமைப்புகள் முதல்முறையாக தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.