சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தங்கம் கடத்தல் வழக்கு: ஜாமீன் கோரி சிவசங்கர் மனு தாக்கல்

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

News image
கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கர் (கோப்புப்படம்)
Updated On :20 நவம்பர் 2020, 8:04 am

DIN

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கொச்சி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது கேரள உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்திற்கு தங்கம் கடத்தி வந்ததாக கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வழக்கில் தொடர்புடையதாக தூதரக ஊழியர்கள் உள்பட பலரை கைது செய்தனர்.

தங்கம் கடத்தல் வழக்கில் உதவியதாக முன்னாள் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கரையும் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் தற்போது சிவசங்கர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதற்கு முன்பு எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் சிவசங்கரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.