கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பிளாஸ்மா தானமளித்து 350 கரோனா நோயாளிகளை காப்பாற்றிய தில்லி காவலர்கள்

கரோனாவிலிருந்து மீண்டு, தன்னைப் போல பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காக்க பிளாஸ்மா தானமளித்து பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார் தில்லி காவலர் கிரிஷண் குமார்(42).

News image

பிளாஸ்மா தானமளித்து 350 கரோனா நோயாளிகளை காப்பாற்றிய தில்லி காவலர்கள்

Updated On :26 நவம்பர் 2020, 4:03 pm IST


புது தில்லி: கரோனாவிலிருந்து மீண்டு, தன்னைப் போல பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காக்க பிளாஸ்மா தானமளித்து பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார் தில்லி காவலர் கிரிஷண் குமார்(42).

கரோனாவிலிருந்து மீண்டு, பிளாஸ்மா தானமளித்து சுமார் 350 கரோனா நோயாளிகளை காப்பாற்றியிருக்கிறார்கள் தில்லி காவலர்கள். அதில் ஒருவர்தான் கிரிஷண் குமார்.

தில்லியின் தென்மேற்கு மாவட்டமான கப்ஷேரா காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் கிரிஷண் குமார், தனக்கு கரோனா பாதித்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அனுபவம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சுமார் ஒரு மாத காலம் செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வந்தேன். நான் பிழைப்பேன் என்று யாருமே நினைக்கவில்லை. ஆனால் கடவுளின் கருணையால் பிழைத்துவிட்டேன். 

நான் குணமடைந்த பிறகுதான், கரோனாவால் பாதிக்கப்படுவோரைக் காக்க அவரது குடும்பத்தினர் எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறார்கள் என்பதை உணர்ந்தேன். அதனால்தான் பிளாஸ்மா தானமளிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஒருவர் அதிகபட்சமாக 5 முறை பிளாஸ்மா தானமளிக்கலாம். ஒரு முறை பிளாஸ்மா தானமளிக்கும் போது அதனை மூன்று பேருக்கு பயன்படுத்தி, ஒருவர் மூலமாக 15 பேரை காக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மே மாதம் குமாருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனது மனைவியும் குணமடைந்த பிறகு, அவரையும் பிளாஸ்மா தானமளிக்க ஊக்கப்படுத்தினேன். காவல்துறையைச் சேர்ந்த யாருக்கு பிளாஸ்மா தேவைப்பட்டாலும் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு குமார் தெரிவித்திருந்தார்.

தில்லி காவல்துறையைச் சேர்ந்த 81,346 காவலர்களில் சுமார் 7 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 26 பேர் பலியாகினர். 

நவம்பர் 23-ம் தேதி வரை 323 தில்லி காவலர்கள் தங்களது பிளாஸ்மாவை தானமளித்துள்ளனர், இதில் 82 பேர் தங்களது சக காவலர்களுக்காகவும், 107 பேர் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுக்காவும், 134 பேர் யாரென்றே தெரியாத பொதுமக்களுக்காவும் பிளாஸ்மா தானமளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.