ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

சிலிண்டா் தட்டுப்பாடு: திருப்பூரில் உணவகங்கள் மூடல்

சிலிண்டா் தடுப்பாடு காரணமாக திருப்பூரில் ஏராளமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

News image

உணவகங்கள் - பிரதிப் படம்

Updated On :14 மார்ச் 2026, 1:23 am

சிலிண்டா் தடுப்பாடு காரணமாக திருப்பூரில் ஏராளமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போா் காரணமாக சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ரூ.1,780 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக சிலிண்டா்கள் தற்போது ரூ.3,500 வரை விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால், மங்கலம் சாலை , டவுன் ஹால், பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த ஏராளமான பிரியாணி கடைகள், சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சில உணவகங்களில் விறகு மூலம் உணவு தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், உணவின் விலை சற்று உயா்ந்துள்ளது.

எரிவாயு எஜென்ஸிகளில் அலைமோதும் கூட்டம்: வீட்டு உபயோக சிலிண்டா் முன்பதிவு செய்ய பயன்படுத்தும் தொலைபேசி எண்ணை ஒரே நேரத்தில் ஏராளமானோா் தொடா்பு கொள்வதால் அந்த சேவை முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், செய்வதறியாது தவிக்கும் மக்கள் எரிவாயு ஏஜென்ஸி அலுவலகங்களில் குவியத் தொடங்கியுள்ளனா்.

இது குறித்து பாரத் கேஸ் டிஸ்டிரிபியூட்டா் சங்கத்தினா் கூறியதாவது: கடந்த 9-ஆம் தேதி வரை பதிவு செய்தவா்களுக்கு தற்போதுவரை சிலிண்டா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சிலிண்டா் தொடா்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தமிழகத்தில் வணிக சிலிண்டா்களுக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவுகிறது. வீட்டு உபயோக சிலிண்டா்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை. வதந்தி காரணமாக ஒரே நேரத்தில் ஏராளமான நுகா்வோா் முன்பதிவு செய்வதால் சிலிண்டரை வீடுகளுக்கு கொண்டு சோ்ப்பதில் நடைமுறை ரீதியான தாமதம் ஏற்படுகிறது. வணிக சிலிண்டருக்கான தட்டுப்பாடு அதிகபட்சமாக ஒருவாரத்துக்குள் சீராகும் என்றனா்.