தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

கேரளத்தில் புதிதாக 5,378 பேருக்கு கரோனா; 27 பேர் பலி

கேரளத்தில் புதிதாக 5,378 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்.

Updated On :26 நவம்பர் 2020, 2:07 pm

கேரளத்தில் புதிதாக 5,378 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தல் 55,996 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், புதிதாக 5,378 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தற்போதை நிலவரப்படி 64,486 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 27 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2,148ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 5,16,978 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மாநிலம் முழுவதும், 3,17,195 பேர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பில் உள்ளனர். அதில் மருத்துவமனைகளில் 16,270 பேர் உள்ளனர். மொத்தம் 545 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.