ஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: இரு ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஸ்ரீநகரில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.  
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஸ்ரீநகரில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த இரு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.  

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே குஷிபோரா பகுதியில் பாதுகாப்புப்படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. 

இதில், பாதுகாப்புப்படையைச் சேர்ந்த இருவர் வீரமரணம் அடைந்தனர். மேலும், இரு வீரர்கள் படுகாயமுற்றனர். காயமடைந்த வீரர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால் பதற்ற சூழல் நிலவுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com