கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாகிஸ்தான் தாக்குதல்: ரஜௌரியில் 2 இந்திய வீரர்கள் வீரமரணம்

இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், ரஜௌரி மாவட்டத்தில் இரண்டு இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

News image

ஜம்மு காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்

Updated On :27 நவம்பர் 2020, 9:44 am


ஜம்மு: இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், ரஜௌரி மாவட்டத்தில் இரண்டு இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

பிரேம் பகதுர் கத்ரி மற்றும் சுக்பீர் சிங் ஆகியோர் பாகிஸ்தான் தாக்குதலில் படுகாயமடைந்தனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாக பாதுகாப்புப் படையின் லெப்டினன்ட் கலோனல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ரஜௌரி மாவட்டம் சுந்தர்பானி செக்டார் அருகே, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லைப் பகுதியான பூஞ்ச்சில், நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.