விபத்தில் சிக்கிய இந்தியக் கடற்படை விமானம்: விமானியைத் தேடும் பணி தீவிரம்

விபத்தில் சிக்கிய இந்தியக் கடற்படை விமானத்தில் பயணம் செய்த விமானியைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
விபத்தில் சிக்கிய இந்தியக் கடற்படை விமானம்: விமானியை தேடும் பணி தீவிரம் 
விபத்தில் சிக்கிய இந்தியக் கடற்படை விமானம்: விமானியை தேடும் பணி தீவிரம் 

விபத்தில் சிக்கிய இந்தியக் கடற்படை பயிற்சி விமானத்தில் பயணம் செய்த விமானியைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் இருந்து பயிற்சிக்காகச் சென்ற இந்திய கடற்படைக்குச் சொந்தமான மிக்-29கே ரக விமானம் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் அரபிக் கடல் பகுதியில் விபத்தில் சிக்கியது.

இதில் பயணம் செய்த இருவரில் ஒரு விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன மற்றொரு விமானியைத் தேடும் பணியில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கடற்படை விமான விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com