சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

விபத்தில் சிக்கிய இந்தியக் கடற்படை விமானம்: விமானியைத் தேடும் பணி தீவிரம்

விபத்தில் சிக்கிய இந்தியக் கடற்படை விமானத்தில் பயணம் செய்த விமானியைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

News image
விபத்தில் சிக்கிய இந்தியக் கடற்படை விமானம்: விமானியை தேடும் பணி தீவிரம் 
Updated On :27 நவம்பர் 2020, 7:46 am

DIN

விபத்தில் சிக்கிய இந்தியக் கடற்படை பயிற்சி விமானத்தில் பயணம் செய்த விமானியைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் இருந்து பயிற்சிக்காகச் சென்ற இந்திய கடற்படைக்குச் சொந்தமான மிக்-29கே ரக விமானம் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் அரபிக் கடல் பகுதியில் விபத்தில் சிக்கியது.

இதில் பயணம் செய்த இருவரில் ஒரு விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன மற்றொரு விமானியைத் தேடும் பணியில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கடற்படை விமான விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.