தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,185 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,185 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப் படம்.

Updated On :27 நவம்பர் 2020, 2:32 pm

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,185 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
நாட்டிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரம் உள்ளது. ஆனால் கடந்த சிலதினங்களாக அம்மாநிலத்தில் கரோனா தொற்று பரவும் வேகம் பெருமளவு குறைந்து வருகிறது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று புதிதாக 6,185 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,08,550 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு இன்று ஒரே நாளில் மேலும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46,898 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து இன்று ஒரே நாளில் 4,089 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,72,627 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 87,969 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
5,28,395 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.