நொய்டாவில் சாலை விபத்து: 4 பேர் பலி, ஒருவர் காயம்

உத்தரப் பிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் சனிக்கிழமை பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரப் பிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் சனிக்கிழமை பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.

யமுனா நெடுஞ்சாலையில் கார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, இறந்தவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூடுதல் துணை ஆனையர் விஷால் பாண்டே தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரே வாரத்தில் நடந்த இரண்டாவது விபத்து இதுவாகும் என்று அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com