கரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்டால் தில்லி தலைநகரில் அனைத்து வீடுகளுக்கும் கரோனா மருந்து வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கரோனா வைரஸ் தொற்று மூன்றாவது முறையாக மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்ட 3 முதல் 4 வாரங்களில் தில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரப் பணியாளர்களின் உதவியுடன் கரோனா மருந்து வழங்கப்படும் என்று கூறினார்.
கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத், ஹைதராபாத், புணேவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேலும், கரோனா மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது கொண்டுவரப்படும் என்பது தொடர்பாகவும் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!
ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


