ஹிமாசலில் கரோனா தொற்று அதிகமாக உள்ள 4 மாவட்டங்களில் மட்டும் இரவு நேர முழு முடக்கம் அறிவிப்பது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஜெய் ராம் தாக்குர் ஆலோசனை மேற்கொண்டார்.
ஹிமாசலில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஜெய் ராம் தாக்குர் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் பேசிய அவர், ஹிமாசலில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், டிசம்பர் 15-ஆம் தேதி வரை மாநில அரசு அலுவலர்கள் 5 நாள்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்றும், 6 நாள்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், கரோனா பரவல் அதிகமாக உள்ள சிம்லா, மண்டி, குலு, மற்றும் காங்க்ரா ஆகிய மாவட்டங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை முழு முடக்கம் அறிவிக்க வேண்டும் என்று ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறினார்.
முன்னதாக மாநிலம் முழுவதும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களை திறக்கக் கூடாது என்று ஹிமாசல அரசு உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


