ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

இந்தூர்: மாவட்ட உயர்நீதிமன்றத்தில் ஊழியர் உள்பட 52 பேருக்கு கரோனா

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மாவட்ட உயர்நீதிமன்றத்தில் ஊழியர் உள்பட 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 11:28 am

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மாவட்ட உயர்நீதிமன்றத்தில் ஊழியர் உள்பட 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தூர் மண்டல அதிகாரி அமித் மலகர் கூறுகையில், இந்தூரில் உள்ள மாவட்ட உயர்நீதிமன்றத்தில் 322 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஊழியர் உள்பட 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தொற்று உறுதி செய்யப்பட்டோரில் பெரும்பாலானோர் உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆவர். இதையடுத்து அவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
இந்தூரில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.
 மத்தியப் பிரதேசத்தில் தற்போது 14,981 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,85,013 பேர் குணமடைந்த நிலையில் 3,237 பேர் பலியாகியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.