ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாஜகவிலிருந்து வெளியேறிய யாரும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை: சுஷில் மோடி

பாஜகவிலிருந்து வெளியேறிய யாரும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை என பிகார் முன்னாள் துணை முதல்வரும் பாஜக தலைவருமான சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :29 நவம்பர் 2020, 4:30 pm

DIN


பாஜகவிலிருந்து வெளியேறிய யாரும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை என பிகார் முன்னாள் துணை முதல்வரும் பாஜக தலைவருமான சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் பேசியதாவது:

"பாஜக ஒருவழிப் பாதை மாதிரி. பாஜகவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், இங்கிருந்து யாரும் போக முடியாது. பாஜகவிலிருந்து வெளியேறியவர்கள் யாரும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை. நான் பிகார் அரசின் அங்கமாக இல்லாதபோதும், எனது ஆன்மா பிகார் அரசினுள்தான் இருக்கிறது. நமது கட்சியை நாம் வலுவிழக்க விடக் கூடாது" என்றார் அவர்.

பிகார் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, துணை முதல்வராக இருந்த சுஷில் மோடிக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.