மிக்-29கே விமான விபத்து: காணாமல் போன விமானியை தேடும் பணியில் ஆழ்கடல் நீச்சல் வீரா்கள்

அரபிக் கடல் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் காணாமல் போன விமானியை தேடும் பணியில் ஆழ்கடல் நீச்சல் வீரா்கள் ஈடுபட்டுள்ளனா்.
Published on
Updated on
1 min read

மும்பை: அரபிக் கடல் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் காணாமல் போன விமானியை தேடும் பணியில் ஆழ்கடல் நீச்சல் வீரா்கள் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த நவ.26-ஆம் தேதி இந்திய கடற்படையின் விக்ரமாதித்யா போா்க்கப்பலில் இருந்து புறப்பட்ட மிக்-29கே விமானம், கோவா கடற்கரையையொட்டிய அரபிக் கடல் பகுதியில் விழுந்து விபத்துள்ளானது. இதில் விமானத்தில் இருந்த இரு விமானிகள் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொரு விமானி நிஷாந்த் சிங் காணாமல் போனாா்.

அவரை தேடும் பணி தொடா்பாக இந்திய விமானப்படை செய்தித்தொடா்பாளா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘விமான விபத்தில் காணாமல் போன விமானி நிஷாந்த் சிங்கை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவரை தேடும் பணியில் இந்திய கடற்படை கப்பல்கள், விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணியில் தற்போது ஆழ்கடல் நீச்சல் வீரா்களும் ஈடுபட்டுள்ளனா். அவரை கண்டுபிடிக்கும் பணியில் அதிநவீன கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக இந்திய விமானப்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com