சராசரியாக ஒரு நாளில் 87 பாலியல் பலாத்கார சம்பவங்கள்
நாட்டில் சராசரியாக ஒரு நாளில் 87 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடப்பதாக குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


புது தில்லி: 2019-ஆம் ஆண்டில் நாட்டில் சராசரியாக ஒரு நாளில் 87 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடப்பதாக குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2019-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக 4,05,861 வன்முறை சம்பவங்கள் காவல்நிலையங்களில் பதிவாகியுள்ளது. இது கடந்த 2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் 7 சதவீதம் அதிகம் என்றும் மத்திய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் பட்டியலினப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2018-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக 3,78,236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 33,356 பாலியல் பலாத்கார வழக்குகள் அடங்கும், இது 2017-ஆம் ஆண்டு பதிவான 32,559 பாலியல் பலாத்கார வழக்குகளைக் காட்டிலும் அதிகமாகும். 2019-ஆம் ஆண்டில் மட்டும் 32,003 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...