ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

தெலங்கானாவில் மேலும் 1,983 பேருக்கு கரோனா: 10 பேர் பலி

தெலங்கானா மாநிலத்தில் புதிதாக 1,983 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தை எட்டியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image

Telangana records 1,983 new COVID-19 cases, ten fatalities in past 24 hrs

Updated On :6 அக்டோபர் 2020, 6:18 am

தெலங்கானா மாநிலத்தில் புதிதாக 1,983 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தை எட்டியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. அந்தவகையில், தெலங்கானா மாநிலத்தில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,983 பேருக்குத் தொற்று பாதித்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 2,02,594 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் ஒரேநாளில், பத்து பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 1,181 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 50,598 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஒட்டுமொத்தமாக, சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 32,92,195 ஆகும். 

மேலும் ஒரேநாளில் 2,381 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், இதுவரை 1,74,769 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் மீட்பு விகிதம் 86.26 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட 26,644 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.