6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி: கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான ஓவியப் போட்டி

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினரால் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

News image
இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினரால் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்
Updated On :9 அக்டோபர் 2020, 11:25 am

DIN

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினரால் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தில்லியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா நோயாளிகளுக்காக பிரம்மாண்ட யோகாசனப் பயிற்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கரோனா நோயாளிகள் பங்குபெற்று யோகாசனம் செய்தனர்.

இதேபோன்று கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

தில்லியில் கரோனா நோயாளிகளை கண்காணித்து வரும் சர்தார் படேல் கரோனா தடுப்பு மையம் மற்றும் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு ஓவியங்களை வரைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.