தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகாராஷ்டிரத்தில் கனமழை வெள்ளம்: மீட்புப் படையினர் குவிப்பு

மகாராஷ்டிரத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மீட்புப் படையை சேர்ந்த இரண்டு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

News image

கனமழையால் சாலைகளில் சூழ்ந்த வெள்ளப்பெருக்கு

Updated On :15 அக்டோபர் 2020, 5:54 am

DIN

மகாராஷ்டிரத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மீட்புப் படையை சேர்ந்த இரண்டு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் கடந்த இரண்டு நாள்களாக தொடர் மழை பெய்த நிலையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

புறநகர் பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால்,     நெற்பயிற்கள், வாழை, பப்பாளி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. 

சாவித்ரிபாய் புணே பல்கலைக்கழகம் இணையவழித் தேர்வை ஒத்திவைத்துள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மகாராஷ்டிரம், மும்பை, தாணே உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த இரண்டு குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அடுத்த 12 மணிநேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.