ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

கேரளத்தில் புதிதாக 9,016 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 9,016 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 அக்டோபர் 2020, 2:36 pm


கேரளத்தில் புதிதாக 9,016 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. 52,067 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் இந்த முடிவு கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, கேரளத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 96,004 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 7,991 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,36,989 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 26 பேர் கரோனாவுக்கு பலியானது உறுதியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,139 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் 2,76,900 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் மருத்துவமனையில் மட்டும் 24,965 பேர் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.