சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

'விவசாயியின் ஆன்மா மீதான தாக்குதலே வேளாண் சட்டங்கள்'

புதிய வேளாண் சட்டங்கள் மூலம் அனைத்து விவசாயிகளின் ஆன்மா மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

News image
காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி (கோப்புப்படம்)
Updated On :17 அக்டோபர் 2020, 11:21 am

DIN

புதிய வேளாண் சட்டங்கள் மூலம் அனைத்து விவசாயிகளின் ஆன்மா மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நவீன கிராம திட்டத்தின் இரண்டாம் கட்ட விழிப்புணர்வு பிரசாரத்தை காணொலி காட்சி வாயிலாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி துவக்கி வைத்தார்.

பிரச்சாரத்தின் கீழ் சுமார் 50,000 வெவ்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ .2,663 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் துவக்கிவைத்து பேசிய அவர், ''மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல். விவசாயிகளின் ரத்தம் மற்றும் வியர்வை மீது நடத்தப்பட்ட தாக்குதல். இத்தகைய தாக்குதல் நாட்டின் அடித்தளத்தை பலவீனப்படுத்துகின்றன'' என்று கூறினார்.

''கடந்த சில நாள்களுக்கு டிராக்டர் பேரணிக்காக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவிற்கு சென்ற போது, வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது பெரும்சுமையாக உள்ளதை உணர்ந்தேன். 

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக அக்டோபர் 19-ஆம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வேளாண் சட்டங்கள் குறித்து நல்ல முடிவினை எடுப்பார்கள்'' என்று  ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.