தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

உ.பி., பஞ்சாப், சிக்கிமில் இன்று பள்ளிகள் திறப்பு

கரோனா பேரிடர் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

News image

உ.பி., பஞ்சாப், சிக்கிமில் இன்று பள்ளிகள் திறப்பு

Updated On :19 அக்டோபர் 2020, 10:07 am


கரோனா பேரிடர் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், சிக்கிமில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள், பாடங்களில் தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெறும் வகையில் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வருமாறு மாணவர்கள் வற்புறுத்த மாட்டார்கள் என்றும், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசுகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்நாளான இன்று குறைந்த அளவிலேயே மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.