சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

எனது கட்சியாக இருந்தாலும், கமல்நாத் பேசியது பிடிக்கவில்லை: ராகுல்

​மத்தியப் பிரேதச காங்கிரஸ் மாநிலத் தலைவர் கமல்நாத், அமைச்சர் இமார்த்தி தேவி குறித்து மரியாதை குறைவாக பேசியது துரதிருஷ்டவசமானது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :20 அக்டோபர் 2020, 11:22 am

DIN


மத்தியப் பிரேதச காங்கிரஸ் மாநிலத் தலைவர் கமல்நாத், அமைச்சர் இமார்த்தி தேவி குறித்து மரியாதை குறைவாக பேசியது துரதிருஷ்டவசமானது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரிலுள்ள தாப்ரா நகரில் நவம்பர் 3-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக வேட்பாளராக இமார்த்தி தேவி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மாநிலத் தலைவர் கமல்நாத், இமார்த்தி தேவி குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார். 

கமல்நாத்தின் இந்தக் கருத்துக்கு பாஜக தரப்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

இதுபற்றி, கேரள மாநிலம் வயநாட்டில் முகாமிட்டுள்ள ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"பெண்களை யாரும் மரியாதை குறைவாக நடத்தக் கூடாது. கமல்நாத் என்னுடைய கட்சியைச் சேர்ந்தவர். ஆனால், அவர் பயன்படுத்திய மொழி எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை. இதை நான் ஊக்குவிக்க மாட்டேன். அவர் இவ்வாறு பேசியது துரதிருஷ்டவசமானது."

இதனிடையே, கமல்நாத்தின் கருத்து குறித்து விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கமல்நாத்தின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து, அவரைக் கட்சியின் அனைத்துப் பதிவியிலிருந்தும் நீக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கடிதம் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.