டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வெளிநாட்டவர் இந்தியா வர அனுமதி: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இந்தியா வர விரும்பும் அல்லது இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்ல விரும்புவோருக்கான விசா மற்றும் பயண கட்டுப்பாடுகளுக்கான தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

News image
வெளிநாட்டுப் பயணங்களுக்கான தளர்வுகளை அறிவித்தது உள்துறை அமைச்சகம்
Updated On :27 ஜனவரி 2024, 5:41 pm

DIN

புது தில்லி: இந்தியா வர விரும்பும் அல்லது இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்ல விரும்புவோருக்கான விசா மற்றும் பயண கட்டுப்பாடுகளுக்கான தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றை முன்னிட்டு, சர்வதேச பயணிகளின் போக்குவரத்தை குறைக்க, கடந்த பிப்ரவரி மாதம் முதல் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

இந்நிலையில் இந்தியா வர விரும்பும் அல்லது இந்தியாவை விட்டு செல்ல விரும்பும் வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டினருக்கு விசா மற்றும் பயண கட்டுப்பாடுகளுக்கு தரப்படியான தளர்வு வழங்க மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினர் மற்றும் இதர வெளிநாட்டினர் அனைவரையும் (சுறு்றுலா விசா தவிர) பிற தேவைகளுக்காக இந்தியா வர அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டம், சிறப்பு விமான போக்குவரத்து ஏற்பாடு, அல்லது விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதிக்கும் வர்த்தக விமானங்கள் மூலம் பயணிகள் வரலாம். 

ஆனால், அனைத்து பயணிகளும், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், தனிமைப்படுத்துதல் உள்பட மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை கடுமையாக பின்பற்ற வேண்டும்.

இந்த தரப்படுத்தப்பட்ட தளர்வின் கீழ், தற்போதுள்ள அனைத்து விசாக்களையும் (எலக்ட்ரானிக் விசா, சுற்றுலா விசா தவிர) உடனடியாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இந்த விசாக்கள் காலாவதியானாலும், சம்பந்தப்பட்ட பிரிவுகளின் புதிய விசாக்களை இந்திய தூதரகங்களிடம் இருந்து பெற முடியும். மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வர விரும்பும் வெளிநாட்டினர், தங்கள் மருத்துவ உதவியாளர்களுக்கும் சேர்த்து மருத்துவ விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். 

மத்திய அரசின் இந்த முடிவால் வர்த்தகம், மாநாடு, வேலைவாய்ப்பு, படிப்பு, ஆராய்ச்சி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக வெளிநாட்டினர் இந்தியா வர முடியும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.