தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கரோனாவிலிருந்து மீண்டார் மாற்றுத்திறன் வில்வித்தை வீரர் அங்கிட்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளியான வில்வித்தை வீரர் அங்கிட் குணமடைந்தார்.

News image

கோப்புப் படம்.

Updated On :23 அக்டோபர் 2020, 4:08 pm

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளியான வில்வித்தை வீரர் அங்கிட் குணமடைந்தார்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 13-ஆம் தேதி சோனபட்டில் உள்ள பகவான்தாஸ் மருத்துவமனையில் அங்கிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர் குணம் அடைந்தார். எனினும், அவர் பத்து நாட்கள் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

முகாமில் பங்கேற்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் கரோனா தொற்று சோதனையில் தொற்று இல்லை என்று முடிவு வந்ததால் சோன்பட்டில் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கிய தேசிய முகாமில் அங்கிட் பங்கேற்றிருந்தார். பின்னர் முகாம் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையான வழிகாட்டும் செயல்முறைகளின் போது கடந்த 12ம் தேதி மீண்டும் அவருக்கு நடந்த கரோனா தொற்று சோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.