தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

'நாட்டில் 2 மாதங்களுக்குப் பிறகு 7 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கரோனா'

நாட்டில் 63 நாள்களுக்குப் பிறகு 7 லட்சத்திற்கும் குறைவான அளவில் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image

'நாட்டில் 2 மாதங்களுக்குப் பிறகு 7 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கரோனா' (கோப்புப்படம்)

Updated On :23 அக்டோபர் 2020, 7:15 am

நாட்டில் 63 நாள்களுக்குப் பிறகு 7 லட்சத்திற்கும் குறைவான அளவில் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறை அதிகரித்துள்ளது.

இதன் மூலம் கரோனா தொற்றுடைய நபரைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதன் மூலம் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.

இந்த தொடர் முயற்சியின் விளைவாக கடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு 7 லட்சத்திற்கும் கீழ் கரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது, நாடு முழுவதும் 6,95,509 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து 6-ஆவது நாளாக 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. 
இதேபோன்று கடந்த 63 நாள்களுக்குப் பிறகு 7 லட்சத்திற்கும் குறைவாக கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 8.96 சதவீதமாக குறைந்துள்ளது. 

நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான தகவலின்படி 55,366 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 77,61,312-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த மாதம் 16-ஆம் தேதி 50 லட்சத்தையும், கடந்த மாதம் 28-ஆம் தேதி 60 லட்சத்தையும், கடந்த 11-ஆம் தேதி 70 லட்சத்தையும் கடந்திருந்தது. தொடா்ந்து நான்காவது நாளாக 60,000-க்கும் கீழ் தினசரி கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.