தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

“பள்ளிகள் திறப்பு இப்போது சாத்தியமில்லை”: தில்லி முதல்வர் கெஜ்ரிவால்

தில்லியில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை தெரிவித்தார்.

தில்லியில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை தெரிவித்தார்.

கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும், பள்ளிகளும் மார்ச் 16 முதல் மூடப்பட்டுள்ளன. 

பல்வேறு கட்டங்களில் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. தில்லியில் அக்டோபர் 31 வரை கல்வி நிலையங்கள் மூடப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை பேசிய தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கரோனா தொற்று காரணமாக தற்போதைய சூழலில் கல்வி நிலையங்களைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com