மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,645 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு புதிதாக 3,645 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,48,665 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 9,905 பேர் குணமடைந்துள்ளனர், 84 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 43,348 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 14,70,660 பேர் குணமடைந்துள்ளனர். 1,34,137 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு குணமடைவோர் விகிதம் 89.2 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.63 சதவிகிதம்.