ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஷர் படேல் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட் செய்கிறது.
தில்லி கேபிடல்ஸின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விப்ராஜ் நிகமுக்குப் பதிலாக ஆகிப் நபியும், நிதீஷ் ராணாவுக்குப் பதிலாக அஷுத்தோஷ் சர்மாவும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸின் பிளேயிங் லெவனில் கார்த்திக் சர்மாவுக்குப் பதிலாக டெவால்ட் பிரேவிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மாட் ஹென்றிக்குப் பதிலாக குர்ஜப்னீத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
Summary
In the IPL series, Delhi Capitals won the toss in the match against Chennai Super Kings and elected to bowl.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











