ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் பேட் செய்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேப்டன் ரியான் பராக் மற்றும் ரவீந்திர ஜடேஜா பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.
லக்னௌ அணியின் பிளேயிங் லெவனில் முகமது ஷமி மற்றும் அய்டன் மார்க்ரம் இல்லை. மோஷின் கான் மற்றும் ஆயுஷ் பதோனி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Summary
In the IPL match against the Lucknow Super Giants, the Rajasthan Royals won the toss and elected to bowl.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









