கரோனா பாதிப்பு 79 லட்சத்தைக் கடந்தது

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 79 லட்சத்தைக் கடந்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 79 லட்சத்தைக் கடந்துள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 45,149 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 79,09,960-ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 59,105 போ் குணமடைந்தனா்.

இவா்களுடன் கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 71,37,229-ஆக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி, கரோனாவுக்கு மேலும் 480 போ் உயிரிழந்தனா். இதனால் நாடு முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,19,014-ஆக அதிகரித்தது. நாடு முழுவதும் 6,53,717 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, அக்டோபா் 25-ஆம் தேதி வரை 10,34,62,778 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 9,39,309 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com