சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜார்க்கண்ட் காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் தொடக்கம்

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள காவல்நிலையங்களில் பெண்கள் உதவி மையம் அமைக்கப்படுவதாக மாநில காவல்துறைத் தலைவர் அறிவித்துள்ளார்.

News image
ஜார்க்கண்ட் காவல்துறை
Updated On :27 அக்டோபர் 2020, 12:37 pm

DIN

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள காவல்நிலையங்களில் பெண்கள் உதவி மையம் அமைக்கப்படுவதாக மாநில காவல்துறைத் தலைவர் அறிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள 300 காவல் நிலையங்களில் முதற்கட்டமாக பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை பேசிய மாநில காவல்துறைத் தலைவர், நிர்பயா நிதியிலிருந்து 300 காவல்நிலையங்களில் பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார். இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

முன்னதாக பெண்களை பொதுஇடங்களில் கேலி செய்வது அல்லது வேறு ஏதேனும் குற்றம் தொடர்பாக பெண்கள் புகார் அளிக்க ஜார்க்கண்ட் காவல்துறை சமீபத்தில் 24 மாவட்டங்களிலும் வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இதுவரை 108 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.